பைக்குகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. இருவர் பலி

60பார்த்தது
பைக்குகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. இருவர் பலி
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் அருகே அதிவேகமாக சென்ற இரண்டு பைக்குகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட கோர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு பைக்கில் 4 பேரும், மற்றொரு பைக்கில் 2 பேரும் பயணம் செய்த நிலையில் விபத்து காரணமாக தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.