பெண்கள் குறித்த அவதூறு வழக்கில் நீண்ட இழுபறிக்குப் பின், காவல் வாகனத்தில் இருந்து இறங்கி செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
ஸ்டாலின் சென்றார். தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில்தான் இறங்குவேன் எனத் தெரிவித்து வந்த நிலையில், அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து வாகனத்தை விட்டு வெளியே வந்த அவர், அங்கிருந்த
திமுக தொண்டர்களை நோக்கி கையசைத்தவாறு காவல் நிலையத்திற்குள் சென்றார்.