கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினர் வாகனத்தைச் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குத் திருப்பி அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், "நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சாவூரில் விசாரணை நடத்தினால் மட்டுமே வாகனத்தை விட்டு இறங்குவேன்" என உதயநிதி தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.