விவசாய மேம்பாடு, உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலனுக்காக ஆற்றிய சிறந்த பங்களிப்பை பாராட்டும் வகையில்,
பிரதமர் மோடிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) தனது உயரிய கௌரவமான ‘அக்ரிகோலா’ பதக்கத்தை வழங்கி சிறப்பித்துள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஐநா அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில், அதன் பொது இயக்குனர் டாக்டர் கியூ டோங்யு இந்தப் பதக்கத்தைப் பிரதமரிடம் வழங்கினார்.