சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் அடுத்த 3 ஆண்டுகளில் 260 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹவுரா-கவுகாத்தி இடையேயான முதல் படுக்கை வசதி ரயில் சேவைக்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து, இரவு நேர பயணங்களுக்காக இந்த உற்பத்தி விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக 24 பெட்டிகளுடன் கூடிய நீண்ட தூர ரயில்களை வடிவமைக்கும் பணியில் அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.