வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமிக்கு இன்று (பிப். 11) இரண்டாவது முறையாக மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அடுத்து, சத்துவாச்சாரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அவரது அறை முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.