கே.வி.குப்பம் அருகே செங்கல் சூளை தொழிலாளி ராகவன் கொலை வழக்கில், அவரது மாமனார் அமுல்ராஜ், தனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். ராகவன் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், குடித்துவிட்டு மகளை துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இதற்காக பெங்களூருவைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கூலிப்படையை வரவழைத்து ராகவனை கொலை செய்ததாக அமுல்ராஜ் தெரிவித்துள்ளார். கூலிப்படையைச் சேர்ந்த 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.