தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த மயில்வாகனன் சென்னை தெற்கு சரக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சேலம் மாநகர வடக்கு துணை ஆணையர் சிவராமன் வேலூர் மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடமாற்றங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளன.