வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (பிப். 7) வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட சுகாதார அலுவலர் சதீஷ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால் உட்பட பலர் உடன் இருந்தனர்.