வேலூர் ஓல்டு டவுன் உத்தரமாதா கோவில் தெருவில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நடத்திய சோதனையில், அப்பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (52) என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.