வேலூரில் உள்ள செங்கல் சூளை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்று (மே-22) செங்கல் சூளை உரிமையாளர் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.