அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் சாலை ஓரங்களில் குப்பைத்தொட்டி வைக்காததால் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். அப்படி கொட்டப்படும் குப்பைகளில் உள்ள வீணான உணவுப் பொருட்களை உண்பதற்கு மாடுகளும் நாய்களும் அதிக அளவில் சாலைகளில் நடமாடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.