ராணிப்பேட்டை மாவட்டம் நவலாக் புளியங்கண்ணு கிராமத்தில் நவலாக் பண்ணை சாலையில் அமைந்துள்ள மடுவில் புள்ளிமான்கள் அதிகம் நடமாடிக் கொண்டிருக்கின்றன. மேலும் நேற்று மாலை மான்களை நாய்கள் விரட்டிக் கடித்துக் கொண்டிருந்தன. அதனைப் பார்த்த பொதுமக்கள் நாய்களை விரட்டி, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மான்களைப் பத்திரமாக மருத்துவம் பார்க்க அழைத்துச் சென்றனர்.