ரயிலில் கடத்திவரப்பட்ட 17.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு ஒரிசாவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் ரயிலில் கடத்திவரப்பட்ட 17.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.