வாலாஜா வட்டாட்சியர் ஜீப்புக்கு தீ வைத்த நபர் கண்டுபிடிப்பு

425பார்த்தது
வாலாஜா வட்டாட்சியர் ஜீப்புக்கு தீ வைத்த நபர் கண்டுபிடிப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பை கடந்த 22ம் தேதி நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் தீ வைத்து எரித்தார். ராணிப்பேட்டை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் கடந்த 2 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. நீதிபதியின் உத்தரவின் பேரில், அவர் நேற்று சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.