குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து, வெறிநோய் தடுப்பூசி போடும் பணி நடந்தது. நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன், நகராட்சி சுகாதார அலுவலர் அலி உள்பட 10 தூய்மை பணியாளர்கள் வேலூர் மாவட்ட கால்நடை உதவி இயக்குனர் அந்துவன் தலைமையில் கால்நடை மருத்துவ குழுவினர் உடன் சென்று 100க்கும் மேற்பட்ட தெருநாய்களை பிடித்து வெறிநோய் தடுப்பூசி போட்டனர்.