ராணிப்பேட்டை மாவட்டம் களத்தூர் கிராமத்தில் பால் வியாபாரி பழனி வீட்டில் மர்ம நபர்கள் நுழைந்து, பீரோவை உடைத்து 21 சவரன் நகை, ரூ. 7,000 ரொக்கம் மற்றும் வீட்டு மனை பத்திரங்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவளூர் காவல் நிலையத்தில் பழனி புகார் அளித்துள்ளார். திருட்டில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.