ராணிப்பேட்டை வனக்கோட்டம், ஆற்காடு வனச்சரகம், புங்கனூர் காப்புக்காட்டின் குப்பம் கிராம எல்லைப் பகுதியில் விவசாய நிலங்களை ஒட்டி வன நிலத்தை ஆக்கிரமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட விஜயன் என்ற விவசாயியை வனச்சரக அலுவலர் நேற்று கைது செய்தார். வன நில ஆக்கிரமிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.