ராணிப்பேட்டை நகரில் வருகின்ற பிப்ரவரி 20 வெள்ளிக்கிழமை அன்று பழைய பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. சுமார் 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் 300 பணி காலி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை கல்வித் தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 9499055897 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.