ராணிப்பேட்டை மாவட்டம் புலிவலம் பகுதியில் நேற்று (பிப்ரவரி 5) இரவு இரவு புதரில் விழுந்து கிடந்த புல்லட்டில் உயிருக்கு போராடிய நந்திமங்கலத்தைச் சேர்ந்த முருகன் (42) என்பவரை அப்பகுதி மக்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை (பிப். 6) உயிரிழந்தார். இது குறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.