வேலூா் அருகே தொரப்பாடி சுப்பிரமணி தெருவைச் சோ்ந்த மாடு வியாபாரி ராஜா(61), மனைவி இறந்ததால் மனமுடைந்து புதன்கிழமை மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த பாகாயம் போலீஸாா் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவரது மகன் பெங்களூருவில் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.