திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 24 வது வார்டில் இறந்தவரின் பெயரில் எஸ்ஐஆர் படிவம் நிரப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நகராட்சி ஆணையரிடம் முறையிட்டுள்ளார். இறந்தவர்கள் பெயரில் படிவம் நிரப்பப்படும் இந்த சம்பவம் வாணியம்பாடியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.