திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சாலை விரிவாக்கத்திற்காக நூற்றுக்கணக்கான பனை மர செடிகள் பிடுங்கி எறியப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட தனிநபர் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக விவசாய சங்கங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.