திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியில் ஸ்ரீ வல்லப கணபதி கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் இன்று வைகாசி மாதம் சங்கடகர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. மேலும் இந்த பூஜையில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.