வேலூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது அனுப்ரியா ராம் என்பவரின் அறையில் நேற்று இரவு மர்மநபர் புகுந்து கைப்பையை திருட முயன்றார். அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்ட அவர், வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.