வாலிபரிடம் செல்போன் பறித்த பிரபல ரவுடி கைது!

58பார்த்தது
வேலூர் ஓல்ட் டவுன் முருகர் கோவில் தெருவை சேர்ந்தவர் உதயா என்கிற உதயகுமார் (40). பிரபல ரவுடியான உதயகுமார் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 35 வழக்குகள் வேலூர் வடக்கு தெற்கு சத்துவாச்சாரி பாகாயம் ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (22) என்பவர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த உதயகுமார், கார்த்திகேயனை வழிமடக்கி கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்தார்.

இது குறித்து அவர் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஓல்டு டவுன் பகுதியில் பதுங்கி இருந்த உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Job Suitcase

Jobs near you