வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில், சட்டமன்ற உறுப்பினர் ஏ. பி. நந்தகுமார் தலைமையில் SIR பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (நவ. 20) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அமைச்சர் எ. வ. வேலு, SIR பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மாநகர செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி மற்றும் கட்சி நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.