வேலூரில் லேப்டெக்னீஷியன் வீட்டில் யாரும் இல்லாதபோது கதவை உடைத்து 28 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் எஸ்.பி. சிவராமன் விசாரணை நடத்தினார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.