வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் பகுதியில் வருங்கால வைப்புநிதி அலுவலகம் பின்புறம் உள்ள பூங்கா பராமரிப்பு இன்றி உள்ளது. பூங்காவில் பக்கவாட்டில் உள்ள இரும்பு கதவை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதனால் அந்த இடத்தில் பழுதடைந்த குப்பை வண்டியை நிறுத்தி வைத்துள்ளதை படத்தில் காணலாம். எனவே பூங்காவை சீரமைத்து தடுப்பு கம்பிகள் அமைத்து தரவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.