பாஜகவை சேர்ந்த நடிகர் சரத்குமார் அளித்த பேட்டியில், "தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெல்லும். தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து பாஜக தலைமைதான் முடிவு செய்யும். மத்திய அரசின் மீது குறை கூறுவது மட்டுமே திமுக அரசின் வேலையாக உள்ளது. மத்திய அரசுடன் திமுக சுமூக உறவு வைத்திருந்தால் தமிழகம் வளர ஏதுவாக இருக்கும்" என கூறினார்.