தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்ட நிகழ்வு கவனம் பெற்றது. காலை 9.57 மணிக்கு முதலமைச்சர்
விஜய் அவைக்குள் நுழைந்து உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். தொடர்ந்து 9.58 மணிக்கு வந்த உதயநிதி ஸ்டாலினும் முதலமைச்சரை பார்த்து வணக்கம் தெரிவித்தார். நேற்று கைது செய்யப்பட்டு விடுதலையான நிலையில், இன்று வழக்கம்போல் இருவரும் மரியாதையுடன் வணக்கம் தெரிவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.