தேர்தல் வெற்றிக்குப் பிறகு தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நம்மைக் குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு மத்தியில், மக்களை மட்டுமே நம்பி களமிறங்கி வெற்றி பெற்றுள்ளோம். இது தவெகவின் வெற்றி மட்டுமல்ல, தமிழக மக்களின் உணர்வுப்பூர்வமான ஜனநாயகம் பெற்ற வெற்றி" எனத் தெரிவித்துள்ளார். மேலும், இதற்குக் காரணமான வாக்காளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தனது வாழ்நாள் நன்றியைச் சமர்ப்பிப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.