பிரசித்திபெற்ற அரகண்டநல்லூர் அருள்மிகு சௌந்தர்ய கனகாம்பிகை உடனுறை அதுல்யநாதேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (பிப்ரவரி 06) தை மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. விசேஷ அலங்காரத்தில் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.