விழுப்புரம் மாவட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, இந்தியா முழுவதும் சமூகநீதி என்றால் அது திமுகதான். மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தை மறக்க முடியாது. மருத்துவர் ராமதாஸை சமூக நீதிப் போராளியாகவே பார்கிறேன். எடப்பாடி பழனிசாமியின் தரங்கெட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையை எண்ணி வருந்துவதாகவும் அவர் கூறினார்.