மரக்காணம் அருகே அனுமந்தையைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி நந்தினி (15), பொதுத்தேர்வு முடிவுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மனமுடைந்து விவசாய விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக மரக்காணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.