பிரபல நடிகர் தாடி பாலாஜி, திண்டிவனத்தில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத தீண்டீஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தந்து, தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் உருவப்படத்தை கைகளில் ஏந்தியபடி சுவாமி தரிசனம் செய்தார். அங்கு, விஜய்யின் புகைப்படத்திற்கு மாலையிட்டு சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் பூஜைகள் செய்தார்.
விஜய் அரசியல் களத்தில் பெரும் வெற்றிகளைப் பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.