
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல் 2 நண்பர்கள் பலி
விக்கிரவாண்டி அருகே செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் அய்யனார் என்ற இரு இளைஞர்கள், புதுச்சேரி சென்றுவிட்டு திரும்பும்போது முண்டியம்பாக்கம்-லட்சுமிபுரம் சாலையில் எதிரே வந்த டிராக்டர் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





























