விக்கிரவாண்டி அருகே வி. பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுந்தரம் (51), வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெரியதச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.