வீட்டின் கதவை உடைத்து 12 சவரன் நகை வெள்ளிப் பொருட்கள் கொள்ளை

2பார்த்தது
விழுப்புரம் அருகே கௌதம் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சேகர், சென்னை சென்றிருந்தபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 12 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். வீடு திரும்பிய சேகர் இதுகுறித்து தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.