விழுப்புரம் அடுத்த வி. அகரம் கிராமத்தில், சென்னை சென்றிருந்த அம்பிகா (55) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து, 2 சவரன் நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். பக்கத்து வீட்டுக்காரர் அளித்த தகவலின் பேரில் வளவனூர் போலீசார் விசாரணை நடத்தி, அம்பிகா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.