விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 பணிக்கான 3 நாள் அரசு அலுவலர் பயிற்சி வகுப்பு தொடங்கியது. 2011-இல் கையேடு முறையில் நடந்த கணக்கெடுப்பு தற்போது முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக வரும் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 31 வரை வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பும், இரண்டாம் கட்டமாக 2027 பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடைபெறும். அலுவலர்கள் பொதுமக்களை நன்முறையில் அணுகி இப்பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.