விழுப்புரம் அருகே பேரங்கியூர் கிராமத்தில், தனது காதல் மனைவி சிவரஞ்சனியின் (32) நடத்தையில் சந்தேகமடைந்த சரத்குமார் (34), மின் மோட்டார் பம்பால் தலையில் அடித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார். இருவருக்கும் 2 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், ஓராண்டாக நீடித்த குடும்பத் தகராறில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. தகவலறிந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர், சிவரஞ்சனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, கணவர் சரத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.