வானூர் வட்டம், எரையூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த சு.ரகுமான் (47) என்பவர், எரையூரில் கிரஷர் தொழிற்சாலை நடத்தி வந்தார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், வெள்ளிக்கிழமை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.