சென்னையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஹரிகிருஷ்ணன், ரெட்டணை கிராமத்தில் வீடு கட்ட மனை வாங்கி, தற்காலிக மின் இணைப்பு கோரி துணை மின் நிலையத்தை அணுகியுள்ளார். அங்கு பணிபுரியும் வணிக ஆய்வாளர் ரேகா, மின் இணைப்பு வழங்க ரூ. 4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஹரிகிருஷ்ணன், விழுப்புரம் மாவட்ட ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்தார். ரசாயனம் தடவிய ரூ. 4 ஆயிரத்தை ரேகாவிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த போலீஸார் அவரை கைது செய்து, பணத்தைப் பறிமுதல் செய்தனர்.