பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 அன்று போத்தனூரில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் (06115) மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கத்தில், ஜனவரி 15 அன்று செங்கோட்டையில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்படும் ரயில் (06116) மறுநாள் இரவு 7.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். இந்த ரயில் விழுப்புரம், மேல்மருவத்தூர், தாம்பரம், சென்னை எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.