விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மகேஸ்வரன் (50), தனது மகளின் திருமண கவலையால் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்களால் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.