அருப்புக்கோட்டை - Aruppukkottai

போலி பத்திர பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி பொதுமக்கள் மனு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சுழி அருகே இசலி ஊராட்சிக்கு மேலகுமிழங்குளம் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலகுமிழங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்களின் விவசாய நிலங்கள் வீடுகள் போன்ற சொத்துக்கள் இசிலி கிராமத்தை சேர்ந்த இரண்டு தனி நபர்களின் பெயருக்கு மாறியதாக கூறப்படுகிறது. தனி நபரின் பெயருக்கு மாறியதாக புகார் தெரிவித்து அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அப்போது கிராம மக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதி அளித்தார்

வீடியோஸ்


விருதுநகர்
May 19, 2026, 14:05 IST/சாத்தூர்
சாத்தூர்

சாத்தூர்: குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை...

May 19, 2026, 14:05 IST
சாத்தூர் அருகே 2 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை. சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியில், இரண்டு வயது பெண் குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நடுச்சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேது. இவர் சென்னையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மாரீஸ்வரி (25). இவர்களுக்கு மகாராஜா (5) என்ற மகனும், சிவப்பிரியா (2) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். மேலும் பட்டாசு ஆலை அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்தனர். தீயனைப்பு வீரர்கள் உடலை மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்