அருப்புக்கோட்டையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில், முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வருவதாக தெரிவித்தார். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 627 விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், அருப்புக்கோட்டை நகராட்சியில் 102 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.