விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் எ. கா. த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி தாளாளர் எ. கே. டி கிருஷ்ணம ராஜு தலைமை தாங்கினார். பெங்களூர் ஆர். பி. டெக்னாலஜி தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் அய்யாசாமி மற்றும் கோயம்புத்தூர் ஜி. டி. ஸ்டெம் லேப் ரோபோடிக்ஸ் பயிற்சியாளர் ஜெகதீசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர். அறிவியல், சுற்றுச்சூழல், கணிதம், கணினி அறிவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மழைநீர் சேகரிப்பு, கழிவு மேலாண்மை, காலநிலை மாற்றம், ஆட்டோமேஷன் போன்ற 300க்கும் மேற்பட்ட கண்காட்சிகள் இடம்பெற்றன. கல்வி குழுமங்களின் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்வி ஆலோசகர், நிர்வாக உறுப்பினர்கள் உட்பட 3000 பேர் பார்வையிட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், சிறந்த ப்ராஜெக்ட் விருது பெற்ற மாணவர்களுக்கு பரிசு தொகையும் வழங்கப்பட்டது.