
வைகை உபரி நீரை திறந்து விட வலியுறுத்தி அதிமுகவினர் மனு
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவில் உள்ள மாங்குளம், ஆவியூர், குரண்டி, அரசகுளம், கம்பிக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் கண்மாய்ப் பாசனத்தை நம்பியுள்ளன. வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணையில் இருந்து அதிகப்படியான உபரி நீர் வைகை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த உபரி நீரை காரியாபட்டி விவசாயிகளின் நலன் கருதி நிலையூர் - கம்பிக்குடி பாசன கால்வாயில் உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி, காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் கே. முருகன் தலைமையில் பொதுப்பணித்துறை பொறியாளர்களிடம் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


























